மதுரை எம்ப சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:20 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆறு மாதங்களாக இருந்துவரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பல விஐபிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
மேலும் கொரோனாவால் ஜெ அன்பழகன் எம்.எல்.ஏ மற்றும் வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட ஒருசில விஐபிகள் பலியாகி உள்ளனர் என்பதும் சோகமான செய்தி ஆகும். இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தோப்பூரில் உள்ள நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென மதுரை மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments