Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல் கொரோனா பலி – பின்னணி என்ன ?

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:44 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரை நோயாளி இறந்ததன் மூலம் தமிழகத்தில் முதல் கொரோனா பலி நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 18 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 54 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் கொரோனா பலி நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் இவரின் இறப்புக்குக் காரணம் வயது மூப்பும், நாட்பட்ட சில நோய்களும் இருந்ததுவே காரணம் என சொல்லப்படுகிறது. மரணம் குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் டிவிட்டில் ‘சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாக COPD எனப்படும் நுரையீரல் பிரச்சனையும், நீரிழிவு நோயும் மற்றும் உயர் அழுத்த நோயும் இருந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments