Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:42 IST)
கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் ஆவதை அடுத்து மதுரை முதல் கொடைக்கானல் வரை சிறப்பு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சிறப்பு ஏசி பேருந்துகள் மதுரை ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் வரை செல்லும் என்றும் இந்த பேருந்துகளில் கட்டணம் ரூபாய் 150 வசூலிக்கப்படும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிகாலை 4:45 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து 8.30 மணி அளவில் கொடைக்கானல் செல்லும் என்றும் அதேபோல் காலை 9:30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு ஆரப்பாளையம் வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பேருந்து இடைநில்லாபேருந்து என்பதால் மதுரையிலிருந்து நேரடியாக கொடைக்கானல் செல்லும் என்றும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments