Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்ப்புத் தாயை கைவிட்ட மகன் : கழிவறையில் தங்க வைத்த கொடூரம் !

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (08:53 IST)
தனது வளர்ப்புத் தாய் ஒருவரை ஒழுங்காக பராமரிக்காமல் பாழடைந்த கழிவறையில் தங்கவைத்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிகோலஸ். இவரின் வளர்ப்புத் தாய் நிகோலஸின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவர் நிகோலஸின் தாயின் சகோதரியும் ஆவார். அவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மூதாட்டியை ஒழுங்காக பராமரிக்காமல் இருவரும் கொடுமைப் படுத்தியுள்ளனர். அவருக்கு தங்குவதற்கு சுகாதாரமான இருப்பிடம் அமைத்துக் கொடுக்காமல் தங்கள் வீட்டில் உள்ள பாழடைந்த பயன்படுத்தாத கழிவறையில் அவரைத் தங்க வைத்துள்ளனர் நிகோலஸும் அவரது மனைவியும். இந்த ஜனவரி மாத குளிரிலும் அவர் கழிவறையிலேயெ தங்கியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷுக்கு தகவல் செல்ல,  அந்த மூதாட்டியை மீட்டு கருணை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் வயதானத் தாயை ஒழுங்காகப் பராமரிக்காத நிகோலஸ் மற்றும அவரது மனைவியைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments