ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்! – எம்ஜிஆர் பேரன் ஆதரவு!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (09:41 IST)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எம்ஜிஆர் பேரன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசியுள்ள அதிமுக இளைஞரணி துணை செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமாகிய ஜூனியர் எம்ஜிஆர் “எம்ஜிஆர் வியர்வை சிந்தி உருவாக்கிய கட்சி இது. அதன் பின்னர் ஜெயலலிதாவால் காக்கப்பட்டது. ஜெயலலிதா அவர் இருக்கும் காலத்திலேயே ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிதான் கட்சி பொறுப்புகளை அளித்தார். பன்னீர்செல்வமும் அதற்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் சீனியர். இருந்தாலும் பல இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தார். ஒற்றைத் தலைமை என்றால் அதை ஓபிஎஸ்க்குதான் அளிக்க வேண்டும். என்றாலும் பிரச்சினைகளை தவிர்க்க இரட்டை தலைமை என்பதே சரியானது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூப்பர் மார்க்கெட்டில் மாத சம்பளம் வாங்கிய நபர்.. திடீரென ரூ.10 கோடிக்குக் சொந்தக்காரரான அதிசயம்..!

போரை முடிக்க டிரம்ப் விருப்பம்.. ஆட்சி மாற்றம் வரை போர் தொடரும் என நெதன்யாகு அறிவிப்பு.. பெரும் சிக்கல்..!

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம்: வரி செலுத்துவோர் கவனத்திற்கு முக்கிய மாற்றங்கள்!

7 கார், ஒரு மினிடிரக் வைத்துள்ள தவெக வேட்பாளர்.. எதிர்த்து போட்டியிடும் கல்லூரி மாணவி.. வங்கிக்கணக்கில் வெறும் ரூ.1500..

பெண்களுக்கு மாதம் ரூ.3000.. 40 லட்சம் பெண்களுக்கு ரூ.25,000.. 2 லட்சம் வேலைவாய்ப்புகள்.. பாஜக தேர்தல் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments