Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாக்குமரிக்கு தூக்கி அடிங்க..! – மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:07 IST)
காட்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சோதனைக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன் அங்குள்ள மருத்துவர்களிடம் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

காட்பாடி தொகுதியில் உள்ள பொன்னை அரசு மருத்துவமனை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் பாம்பு கடி சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நிலையில் பாம்பு கடிக்கான அவசியமான மருந்துகள் மருத்துவமனையில் இருப்பதில்லை என்றும், மருத்துவர்களும் அடிக்கடி பணியில் இல்லாமல் இருப்பதாகவும் புகார்கள் இருந்து வந்தது.

ALSO READ: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு உரிமையுண்டு- வைத்தியலிங்கம்

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உடன் அமைச்சர் துரைமுருகனும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு பெண் மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்தார்.

அப்போது அங்கு வந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் அவரது ஊரை விசாரித்த அமைச்சர் துரைமுருகன் “இவரை கன்னியாக்குமரிக்கு தூக்கி அடிங்க” என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments