Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தை நடத்தினாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் துரைமுருகன்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (09:38 IST)
கர்நாடக மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் உறுதிப்பட கூடியுள்ளார். 
 
கர்நாடக மாநிலம் கடந்த சில மாதங்களாக மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ள நிலையில் அதற்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
 
இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எழுத்து மூலமாக தெரிவித்தாலும் மேகதாது அணை கட்ட ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். 
 
மேலும்  தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்ட பயிர்களை காப்பாற்ற கர்நாடக மாநில அரசு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் இது குறித்து காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அரசுக்கு ஆணை இடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments