Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலை விளாசும் ஜெயக்குமார்: முதல்வர் பதவி என்ன பொம்மையா?

கமலை விளாசும் ஜெயக்குமார்: முதல்வர் பதவி என்ன பொம்மையா?

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:52 IST)
தமிழக அரசியல் குறித்து சமீப காலமாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என கூறியிருந்தார். மேலும் 100 நாட்களில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க உள்ளதாகவும், மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கூறினார்.


 
 
கமலின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் அதிமுக அமைச்சர்கள் பதில் கூறியே வருகின்றனர். ஏற்கனவே கமல் முதல்வர் ஆக விருப்பம் தெரிவித்தது குறித்து அதிமுகவினர் கருத்து கூறியுள்ள நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கமலை விமர்சனங்களால் விளாசியுள்ளார்.
 
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரிலிருந்து ஜெயலலிதா வரை அனைவரும் முதலில் எம்எல்ஏ ஆகி, எதிர்க்கட்சித் தலைவராகி மக்களுக்கு சேவை செய்தார்கள். யாருமே நான் 100 நாளில் முதல்வராவேன் என்று சொல்லவில்லை.
 
கமல்ஹாசன் சினிமா நூறு நாள் ஓடுவதுபோல அரசியலையும் நினைத்துக் கொண்டார் போல. முதல்வர் பதவி என்ன மூர் மார்க்கெட்டில் விற்கும் பொம்மையா வாங்கிக்கொள்ள? என்றார் ஜெயக்குமார். மேலும் நடிகர் சிவாஜியால் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை. கூட்டம் கூடுவதெல்லாம் ஓட்டாக மாறிவிடாது. ஒட்டாக மாற வேண்டுமென்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். வெறும் டுவிட்டரில் மட்டும் இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments