Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்த வாங்கி குவிப்பானுங்க... திமுகவை பங்கமா கலாய்த்த ஜெயகுமார்!

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (12:40 IST)
காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கத்தால் திமுகவிற்கு லாபம்தான் என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். 
 
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்று  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து உருவான பதற்றத்தால் பாஜக அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது.   
 
ஆம், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மாநிலங்களவையில் ரத்து செய்தது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதை எதிர்த்தன. ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.  
மேலும் மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, பிஜூ ஜனதாதளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதவு அளித்தன. 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய அதிமுக அமைச்சர் ஜெயகுமார், காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கத்தால் திமுகவுக்கே லாபம். இனி யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம் எனும் பட்சத்தில் ஜம்மு காஷ்மீரிலும் திமுக சொத்துகளை வாங்கி குவிக்கும் என கிண்டல் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments