Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆருக்கு பிறகு எடப்பாடியார்தான்! – கடம்பூர் ராஜூ உறுதி

Tamilnadu
Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:02 IST)
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆருக்கு நிகரான சாதனையை எடப்பாடியார் செய்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என திமுகவினரும் திடமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே எம்.ஜி.ஆர் காலத்தில்தான் அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்தது. இந்த முறை தேர்தலில் வெல்வதன் மூலம் அந்த சாதனையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செய்யும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments