Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியா வந்து எலி மருந்து கேட்டா தராதீங்க..! – மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தல்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:36 IST)
தனிநபர் வந்து கேட்டால் எலி மருந்து போன்ற உயிர் கொல்லும் பொருட்களை தர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பல காலமாக மருந்து கடைகளில் விற்கும் எலி மருந்து உள்ளிட்ட ஆட்கொல்லி பொருட்களை தற்கொலைக்கு முயலும் பலர் வாங்கி சாப்பிட்டு இறப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எலி மருந்து விற்க, வாங்க கட்டுப்பாடுகள் தேவை என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக மக்களிடையே உள்ளது,

இந்நிலையில் இதுகுறித்து இன்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

அதேபோல மருந்து கடையில் தனி நபராக யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் போன்றவற்றை கேட்டால் தரக்கூடாது என்றும், முக்கியமாக சிறுவர்களுக்கு இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments