Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிய விளக்கம் அளிக்காவிட்டால் பால் சங்கங்கள் கலைக்கப்படும்: அமைச்சர் நாசர் எச்சரிக்கை..!

minister nassar
Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:33 IST)
அண்டை மாநிலங்களுக்கு பால் கூட்டுறவு சங்கங்கள் பால் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் பால் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
இந்த நிலையில் விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவு துறை அமைச்சகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2000 சங்கங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கம் கலைக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments