Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சி அமைக்குமா என தெரியாது: செல்லூர் ராஜு பகீர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:03 IST)
அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் என அரசியல் களத்தை பரபரப்பாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. 
 
இருப்பினும் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது சமீபத்திய பேட்டியில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். 
 
அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது. இப்போது மக்களை சந்திக்க போகிறோம். நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள்தான் எஜமானர்கள் என அவர் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments