Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 1 வகுப்பில் ஃபெயிலா? கவலை வேண்டாம்! பிளஸ் 2 படிக்கலாம்

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (05:30 IST)
பிளஸ் 1 வகுப்பில் ஏதாவது ஓரிரு பாடங்களில் மாணவர்கள் ஃபெயில் ஆகியிருந்தாலும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம் என்றும் கல்லூரிகளின் அரியர்ஸ் போலவே பிளஸ் 2 படிக்கும்போதே ஃபெய்யிலான பாடங்களின் தேர்வுகளை எழுதலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் ஃபெயிலான மாணவர்களுக்கு ஒருவருடம் வீணாக போகாது என்பது குறிப்பிடத்தக்கது



 
 
மேலும் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் 600-க்கு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கிடப்பட உள்ளதாகவும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து ஜூன் மாதம் நடத்தப்படும் தேர்வில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் இதனால் மாணவர்களின் மன உளைச்சல் நீங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் நீட் உள்பட மத்திய அரசு கொண்டு வரும் அகில இந்திய அளவிலான பொதுத்தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள  52 ஆயிரம் வினாக்களை கொண்ட டிவிடி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நுழைவுத்தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 450 மையங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments