Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்! – அமைச்சர் செந்தில்பாலாஜி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (08:53 IST)
மின்சாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிடப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்து வருகிறார். கடந்த சில காலமாக மின்பயன்பாடு அளவீடில் குளறுபடி, அதிகமான மின்கட்டணம் செலுத்து நிர்பந்திக்கப்படுவது போன்றவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: பண்டிகை காலம்.. செம கூட்டம்.. செம வசூல்..! – ரயில்வே-க்கு உயர்ந்த வருவாய்!

சமீபத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கணக்கீடு குளறுபடிகள் மற்றும் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துதல் குறித்து பேசியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி “கடந்த ஆண்டு 1.50 கோடி பயனாளர்களின் தொடர்பு எண் மின்வாரியத்திடம் இருந்தது. இது தற்போது மூன்று கோடியாக உயர்ந்துள்ளது. முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுவதை தடுக்க மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதின் மூலம் தீர்வு காண முடியும்” என தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments