Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் கைக்குள் அமைச்சர்கள்... ஆதரவாளர் நம்பி ஏமாறப்போகும் ஓபிஎஸ்?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (10:37 IST)
18 அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர்  என தகவல். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. சொந்த ஊரில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல ஈபிஎஸ் இங்கு அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 
 
துணை முதல்வருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆம், 18 அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். 
 
எனவே, ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் உயர் பதவியை வழங்கி அவரை சமரசம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 தான்.. மக்கள் மகிழ்ச்சி.. விவசாயிகள் கவலை..!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறல்.. போலீசுக்கு ஒரே ஒரு ரூபாய் அபராதம்... பரபரப்பு தகவல்..!

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments