Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு ஏதாவதுன்னா தமிழக அரசு சும்மா விடாது..! – மு.க.ஸ்டாலின் உறுதி!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (12:14 IST)
சமீப காலமாக மாணவிகள் தற்கொலை சம்பவம் அதிகரித்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து திருவள்ளூரிலும் மாணவி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் குருநானக் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது “சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய செய்துள்ளன. பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக தொல்லை நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு மன, உடல்ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்களை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது.

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது. பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். உயிரை விடும் சிந்தனைகளை தவிர்த்து உயிர்பிக்கும் சிந்தனைகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments