Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைமறைவில் ஓகே சொல்லிட்டாரா எடப்பாடி? – மு.க.ஸ்டாலின் சந்தேகம்

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (12:17 IST)
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை மத்திய தொல்லியல் துறை அபகரிக்க முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவு சின்னங்கள் அடங்கிய பட்டியலை சரிபார்க்கப் போவதாகவும், புதிய வரலாற்று சின்னங்களை அதில் இணைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல புராதான சின்னங்கள் பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இந்நிலையில் முறையாக இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவில்களையும், புராதான சின்னங்களையும் கைப்பற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் அமைதி காப்பது, திரைமறைவில் அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments