Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனியாவது அலட்சியம் காட்டாமல் செயல்படுங்கள் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:08 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நரம்பியல் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் கொரோனாவால் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனுக்காக பணியாற்றும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அரசு சரியாக செயல்படவில்லை என்பதை காட்டுகிறது. தமிழக அரசு கொரோனா நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments