Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா சாரணர் இயக்கத் தலைவரா?: மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் அரசு என ஸ்டாலின் விளாசல்!

எச்.ராஜா சாரணர் இயக்கத் தலைவரா?: மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் அரசு என ஸ்டாலின் விளாசல்!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (13:10 IST)
தமிழகத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்து சாடியுள்ளார்.


 
 
பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவை சாரணர், சாரணியர் இயக்கத்தலைவராக அதிமுக அரசு நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் காவி கொள்கையை புகுத்தும் செயல் என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ஸ்டாலின் கூறும்போது அதிமுக அரசு எச்.ராஜாவை நியமிக்கும் செய்தி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உள்ளத்தில் நஞ்சை விதைக்க திரைமறைவில் முயற்சி நடக்கிறது என்று கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாஜக பதவியை பெறவே அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது அம்பலமாகியுள்ளது. ஊழல் அதிமுக அரசின் கொள்ளையில் நாங்களும் பங்குதாரர்கள் என்று பாஜக ஒப்புக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments