Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுமணம் செய்த கவுசல்யாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (19:35 IST)
உடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்

இந்த நிலையில் இன்று அவர் பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். கவுசல்யாவின் மறுமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவிதுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கவுசல்யா-சக்தி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

பறை இசை முழங்க இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தமிழ்ச் சமூக வார்ப்புகளான சகோதரி கவுசல்யா - சக்தி ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும்! என்று கூறியுள்ளார்.

முன்னதாக சக்தியுடன் திருமணம் முடிந்தவுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கணவருடன் இணைந்து பறை இசைத்து கவுசல்யா நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments