Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது – முக ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (10:30 IST)
சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிக்க கூடாது என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ”சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையை அளிக்கிறது. அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் மட்டுமல்லாமல் இதில் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. pஏருக்கு சிலரை கைது செய்துவிட்டு அப்படியே விட்டுவிட கூடாது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அனைவரும் சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் காவலர்களுக்கு எதிராக சாட்சியம் வழங்கியுள்ள கான்ஸ்டபிள் ரேவதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உள்ளிட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments