Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நாட்கள்தான் அவகாசம்; கோரிக்கைகளை தெரிவிக்க! – எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் திடீர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (11:43 IST)
தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத முக்கியமான 10 பிரச்சினைகளை ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தெரிவிக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த கடிதத்தில் அவர், மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அதை நிறைவேற்றும் பொறுப்பு எம்.எல்.ஏக்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதி வாரியாக 10 முக்கிய பிரச்சினைகளை வரிசைப்படுத்தி அவற்றை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments