Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன்! – மு.க.ஸ்டாலின் உறுதி!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:25 IST)
திமுகவினர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு, முன்னாள் அமைச்சர் மோசடி வழக்கில் கைது போன்ற சம்பவங்கள் தொடர்பாக, திமுகவினர் காழ்ப்புணர்ச்சியோடு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. திமுகவை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும், ஒரு சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும், அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன் இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments