Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி – மு.க.ஸ்டாலின் தகவல்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (08:12 IST)
தமிழகத்தில் கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு ஊரடங்கி நீடித்து செல்ல முடியாது. ஊரடங்கினால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதேசமயம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments