Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனு கொடுக்க நின்ற பெண்; காரை நிறுத்திய மு.க.ஸ்டாலின்! – கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (13:54 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் காரை நிறுத்தி பெண் ஒருவரை அழைத்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் முதற்கட்டமாக திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகிறார். கோவை கொடிசியா வளாகம், குமரகுரு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

குமரகுரு கல்லூரியில் ஆய்வு முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டபோது கல்லூரிக்கு வெளியே வீதியில் குடும்பத்துடன் பெண் ஒருவர் மனுவை வைத்துக் கொண்டு நின்றுள்ளார். அதை பார்த்ததும் உடனடியாக வாகனத்தை நிறுத்த சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணை அழைத்து அவரிடம் குறைகளை கேட்டுக் கொண்டு மனுவையும் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments