Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதாவது ஞானோதயம் வந்ததே! – பொதுத்தேர்வு ரத்து குறித்து ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (10:15 IST)
தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அரசு கைவிட்டுள்ளது. பழைய முறைப்படியே இனி தேர்வுகள் நடக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவை பல்வேறு கட்சிகளும் பாராட்டி நன்றி தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ”இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே திமுக போராடி வருகிறது. தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல தேர்வை ரத்து செய்துள்ளார்கள். இந்த நிலைப்பாட்டிலாவது தொடர்ந்து நீடித்து புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அறிக்கையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பாராட்டோ, நன்றியோ இல்லாவிட்டாலும் ஆதரவு தெரிவிக்கும் தோனியில் கூட இல்லாமல் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கண்டு அதிமுகவினர் கடுப்பாகி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments