Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை: சூலூர் வாக்குப்பதிவு மையத்தில் சிக்கல்!

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (07:26 IST)
இன்று மக்களவை தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கினை இன்று காலை 7 மணிக்கு பதிவு செய்தார்
 
இந்த நிலையில் தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை 
தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. இந்த நான்கு தொகுதிகளிலும் வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சூலூர் தொகுதியில் உள்ள கருமத்தம்பட்டி என்ற பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தின் 2 பட்டன்கள் வேலை செய்யவில்லை. இந்த தொகுதியின் 116வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யாததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.

கருமாத்தம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் இயங்காத 2 பொத்தான்களை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments