Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (15:10 IST)
10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்தபோது சுமார் எட்டாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் சற்றுமுன் தமிழகத்தில் இருந்து கிளம்பி கேரளா சென்றுள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அரசு விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடமும் பத்து நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார் 
 
இந்த ஆலோசனையில் தேர்தல் கூட்டணி குறித்து மூவரும் பேசியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் பாஜக தவிர வேறு எந்தக் கட்சிகளும் உறுதிசெய்யப்படவில்லை.
 
பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதா? அல்லது அதிமுக பாஜக மட்டும் தனித்து கூட்டணியாக போட்டியிடுவதா என்பது குறித்த ஆலோசனையில் மூவரும் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது
 
மேலும் மத்திய அரசின் ஒரு சில திட்டங்களை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், அந்தத் திட்டங்களை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பிரதமரிடம் வேண்டுகோள் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments