Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் வருமான வரித்துறை சோதனை.. ரூ.17.80 லட்சம், 2,250 கிராம் நகைகள் பறிமுதல்

Mahendran
வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:30 IST)
நெல்லை தொகுதியில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் ரூ.17.80 லட்சம், 2,250 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலை ஒட்டி நெல்லை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை நெல்லையில் வருமான வரித்துறை சோதனையின் போது ரூ.17.80 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2,250 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக, தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சமீபத்தில் நெல்லைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் ரொக்க பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை தொகுதி என்பது விஐபி தொகுதியாக கருதப்படும் நிலையில் அந்த தொகுதியில் தான் அதிக  பண நடமாட்டம் நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments