Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாபாரியை கட்டிப்போட்டு ராசிக்கற்கள் கொள்ளை

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (18:04 IST)
ஆந்திர மாநிலம் விசாக பட்டிணத்தைச் சேர்ந்தவர் ஜபானா ரெட்டிச் சீனிவாச ராவ். இவர் ராசிக்கல் வியாபாரம் செய்துவருகிறார். இணையதளம் மூலம் ராசிக்கற்களை விறகும் இவரை சமீபத்தில் சென்னையில் இருந்து ஒருவர் வியாபாரம் நிமித்தமாக தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் கேட்டபடி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ராசிக்கற்களை எடுத்துக்கொண்டு பாரிமுனையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். 
 
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இரவு இவரது அறையின் கதவைத் தட்டிய 4 பேர் தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை என்று அறிமுகம் செய்துகொண்டனர். பின்னர் முகேஷ் என்ற வியாபாரி எங்கே என்று கேட்டு சீனிவாச ராவை கட்டிப்போட்டு அவரிடம் இருந்த ராசிக்கற்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து வடக்குக்கடற்கரை காவல் நிலையத்தில் ஜபான ரெட்டி புகார் கொடுத்திருந்தார், அதன் பின்னர் அந்த விடுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் ராசிக்கற்களை கொள்ளையடித்த 4 பேரின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கொள்ளையடித்த 4 பேரில் ஒருவன் மும்பைக்குச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 
எனவே  போலீஸார் குற்றவாளிகளைப்பிடிக்க தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments