Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Prasanth Karthick
சனி, 24 மே 2025 (12:07 IST)

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் கேரளா, தமிழக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இனி கேரளா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மும்பை உள்ளிட்ட அரபிக் கடலோர பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

 

வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றாலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments