Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

Siva
செவ்வாய், 28 மே 2024 (12:50 IST)
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இன்று அதாவது மே 28ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கேரளா அரசு கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில் இந்த மனுவை ஆய்வு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது
 
இதனை அடுத்து இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்த மனு ஆய்வு செய்யபப்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம் தொடர்பான மனு மீதான ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று கம்பம் அருகே முல்லைப் பெரியாறு அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments