Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வரிடம் பேசியது என்ன? முரளிதர்ராவ் பேட்டி

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (21:07 IST)
தமிழக முதல்வரிடம் பேசியது என்ன? முரளிதர்ராவ்
சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டையிலும் சிஏஏ போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தீவிர முயற்சி செய்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
 
இந்த நிலையில் திடீரென தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடன் சிஐஏ போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்
 
இவர்கள் இருவரும் அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தி வரும் அதே நேரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் சென்னைக்கு வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆலோசனை நடத்தினார் சென்னை டெல்லி ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் முதல்வரிடம் பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முரளிதரராவ் ’குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை குறித்து முதல்வரிடம் பேசியதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவரிடம் விவாதித்தோம் என்றும் தெரிவித்தார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments