Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வாயில் சிக்கிக் கொண்ட அதிமுக! – முத்தரசன் காரச்சார கருத்து!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (11:14 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ள நிலையில், அதை மோடிதான் முடிவு செய்வார் என முத்தரசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவினராலேயே சொல்ல முடியாது. அதை பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். பாம்பின் வாயில் சிக்கி கொண்ட தவளை போல, பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது. பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments