Publish Date: Sat, 15 Aug 2026 (14:13 IST)
Updated Date: Sat, 15 Aug 2026 (14:15 IST)
நயினர் நாகேந்திரன் ஏற்கனவே ஒருமுறை முதலில் விஜயை திரிஷாவை விட்டு வர சொல்லுங்க என சர்ச்சையாக பேசினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதற்காக மன்னிப்புகேட்டார். இந்நிலையில்தான், தற்போது மீண்டும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் சட்டசபையில் அப்பாவை காணோம். அப்பாவை காணோம் என சொல்கிறார்கள். வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என தெரியும். இப்படிப்பட்டவர்களிடம்தான் தற்போது ஆட்சி இருக்கிறது என பேசியிருந்தார்.
இதையடுத்து முதமைச்சர் விஜயின் அம்மா பற்றி நயினார் நாகேந்திரன் மோசமாக பேசியிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க