Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர் சிங்கம் அண்ணாமலை வந்ததால் பாஜக வளர்ந்து உள்ளது: நடிகை நமீதா பேட்டி

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (14:36 IST)
மைசூர் சிங்கம் தமிழகத்திற்கு வந்ததால்தான் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்துள்ளது என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணாமலை பதவியேற்ற நிலையில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வளர்ந்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகை நமீதா இன்று கோவையில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய போது ’இன்று அன்னையர் தினம், நான் முதன்முதலாக அன்னை ஆனபின் கொண்டாடும் தினம், இருப்பினும் அந்த தினத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்துள்ளேன், இனிமேல் தான் நான் சென்னை சென்று அன்னையர் தினம் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் மைசூர் சிங்கம் அண்ணாமலை தமிழகத்திற்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்றும் எங்கே பார்த்தாலும் பிஜேபி பிஜேபி என்று தான் மக்கள் பேசிகிறார்கள் என்றும் தெரிவித்தார். அவருடைய தலைமையின் கீழ் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments