Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நம்ம ஊரு திருவிழா! அனுமதி இலவசம்! – அமைச்சர் தங்கம் தென்னரசு!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (13:53 IST)
தமிழக அரசு சார்பில் தமிழக நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் “நம்ம ஊரு திருவிழா” என்ற விழா கொண்டாடப்படும் என முன்னதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன் முதற்கட்டமாக மார்ச் 21ம் தேதியன்று மாலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் நம்ம ஊரு திருவிழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments