Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் ஜெயில் உறுதி; தினகரனை தடுக்கும் நடராஜன்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (11:35 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சம் ஜெயிலுக்குப் போவது உறுதி என தினகரனை தடுத்து வருகிறாராம் சசிகலா கணவர் நடராஜன்.


 
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இரட்டை இலையை மீட்போம் என டிடிவி தினகரன் கூறினார். மக்கள் மத்தியில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது, நிச்சயம் வெற்றிப் பெறுவோம் என கூறி வருகிறார். 
 
ஆனால் சசிகலா கணவர் நடராஜனுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதுகுறித்து நடராஜன் அவரது குடுமத்தினரிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் போட்டியிட்டாமல் இருப்பது நல்லது. டெல்லியில் இருந்து நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் நாம் போட்டியிடலாம். மாநிலம் முழுவதும் பரவலாக நமக்கு உள்ள பலத்தை முன்வைத்து களமிறங்குவோம்.
 
ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்தால், எவ்வித வருமான வரித்துறை சோதனையும் நடக்காது. நமக்கான நேரம் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்து உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நடராஜன் சொகுசு கார் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். மத்திய அரசு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
 
ஆனால் டிடிவி தினகரன் சின்னத்தையும், கட்சியையும் கைபற்றாமல் விடமாட்டேன் என்று விடாபிடியாக போராடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments