Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (10:20 IST)
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை என பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து  நீலம் பண்பாட்டு மையம் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, இதை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர்
பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்
 
சக மனிதனை படுகொலை செய்யும் மறவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக  எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த பதிவுக்கு நெட்டிசன் பதிலடி கொடுத்த போது ’கொலை செய்யப்பட்டவர் ஒரு ரவுடி என்றும் அவர் மீது ஏகப்பட்ட கொலை வழக்குகள் இருக்கிறது என்றும் ஒரு கொலைகாரனுக்காக சாதிவெறி என்ற அம்சத்தை தூக்கிக் கொண்டு வருவது நியாயமல்ல என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments