Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வானிலை: தமிழகத்தில் 24 விமான சேவைகள் ரத்து!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (08:27 IST)
தமிழகத்தில் 24 விமான சேவைகள் அடுத்தது ரத்து 
 
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டதாக தென்னிந்திய தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் இரு மார்க்கங்களிலும் இன்று ரயில்கள் இயங்காது என்றும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களுடைய கட்டண தொகை திருப்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் நிவர் புயலால் வானிலை மோசமடைந்ததையடுத்து இன்று  தமிழகத்தில் மட்டும் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமானம் , திருச்சி இருந்து சென்னை வரும் 5 விமானங்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் 5 விமானங்கள் என மொத்தம் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments