Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் இன்றி 10 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம்.. பொதுமக்கள் குமுறல்..!

Siva
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:31 IST)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மின்சாரம் இன்றி 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள தட்டான்குளம் கிராமம் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து, மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே குழப்பம் இருப்பதால் தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
 
10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள் தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் மின்சார பராமரிப்பு பணிகள் அனைத்தும் சரியாகிவிடும் என்றும் அனைத்து பணிகளும் விரைவில் நடைபெறும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments