Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லூர் ராஜூவை காரில் ஏற வேண்டாம் என சொன்னாரா ஈபிஎஸ்? என்ன நடந்தது?

Mahendran
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (14:58 IST)
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றபோது, அவர் பயணித்த காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஏற முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அப்போது, "நீங்கள் வேறு காரில் வாருங்கள்" என்று பழனிசாமி கூறியதாக பரவிய தகவலையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக பேசப்பட்டது.
 
இந்த விவகாரம் குறித்து செல்லூர் ராஜு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு மத்திய அரசால் ஒய் பிரிவில் இருந்து இசட் பிரிவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அவரது காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். 
 
அந்த அதிகாரிகள் இருந்ததால்தான், வேறு காரில் வாருங்கள்' என்று பழனிசாமி என்னிடம் கூறினார். மற்றபடி, எங்களுக்கிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். 
 
இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சைகளுக்கு செல்லூர் ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்! பேச்சுவார்த்தை நடத்த உடனே வர சொன்ன நீதிபதி!

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments