Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்கள் வெளியே வர தடை: போலீசார் அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (12:58 IST)
சென்னையில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்கள் வெளியே வர தடை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19-ஆம் தேதி முதல் அதாவது நாளை 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் யாரும் வாகனங்களில் வெளியே வரகூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 முதல் 30-ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெளியில் யாரும் வரக்கூடாது என போலீசார் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்
 
இதனை அடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளதால் நாளை முதல் 30-ஆம் தேதி வரை எந்த வாகனமும் சென்னையில் ஓட வாய்ப்பில்லை என கருதப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments