Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (15:08 IST)
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவுக்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு மழைக்காலங்கள் உண்டு என்பதும், இந்த இரண்டு மழைக்காலங்களில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவ மழையால் பல மாநிலங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது  இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கிவிட்டது. 
 
இதனை அடுத்து அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments