Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட போச்சே... புகைச்சலில் ஓபிஎஸ் அண்ட் கோ?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (13:29 IST)
அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என கூறப்பட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வம் ஆதர்வாளர்களுக்கு அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்தது. 
 
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வோம் என கூறினார். ஆனால் அவரது கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு முதல்வரை தேர்வு செய்வதால் பிரச்சினை ஏற்படும் என கூறியுள்ள அவர் என்றென்று முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்தான் இருப்பார் என கூறியுள்ளார். 
 
அதே சமயம் ராஜேந்திர பாலாஜியின் கருத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. என்ன இருந்தாலும் சசிகலா நியமித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்படுவது நியாமானதில்லை என அவர்கள் கருதுவதாக தெரிகிறது. முன்பை போல மத்தியும் பன்னீர்செல்வத்தின் மவுசு குறைந்துவிட்டதால் இப்படி கூறப்படுகிறதோ எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments