Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முற்றும் மோதல்? அரசு அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (08:25 IST)
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. 
 
கடந்த சில மாதங்களாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே இருந்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்தது.
 
இதனை அடுத்து அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அனேகமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் முதல்வர் ஈபிஎஸ் துணை முதல்வர் ஓபிஎஸ் ஒருவர் மீது ஒருவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அரசு சார்பில் வெளியான அழைப்பிதழ் ஒன்றில் துணை முதல்வர் ஓ.பனீர்செல்வம் பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை துவங்கி வைக்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி தனியாட் பங்களிப்புடன் நடைபெறுகிறது. தனியார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது மேலும் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments