Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வில் மீண்டும் சசிகலா… ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் யாருக்கு ? – ஓ பி எஸ் பதில் !

அதிமுக
Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (16:38 IST)
அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

மருது சகோதரர்களின் 218ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இருவரின் சிலைகளுக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு ‘தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் இசைவைப் பெற்றுதான் அந்த குடும்பத்தைக் கட்சியை விட்டு நீக்கினோம். அவர்களை அதிமுகவில் இணைக்கச்சொல்லி கேள்வி எதுவும் எழவில்லை. அப்படி எழுமாயின் அதைத் தீர்மானிக்கக் கூடிய மிகப்பெரிய சக்தியாக பொதுக்குழுதான் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments