Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ மிதி விழாவில் தவறிவிழுந்த பெண் பக்தர் காயம்: சென்னை அருகே பரபரப்பு..!

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (16:12 IST)
சென்னை அருகே நடந்த தீமிதி விழாவில் தவறி விழுந்து காயம் அடைந்த ஒருவரை, மருத்துவமனையில் அனுமதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை அருகே வியாசர்பாடியில் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் தீமிதிக்கும் போது திடீரென கால் தவறி விழுந்ததால், அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பெண் பக்தரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டதால், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர், சில நிமிட பதற்றத்திற்கு பின், தீமிதி திருவிழா மீண்டும் தொடரப்பட்டது.

இது தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments