Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூரில் ஹைட்ரோகார்பன் கிணறு; ஓஎன்ஜிசி விண்ணப்பம்! Vs முதல்வர் கடிதம்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (10:16 IST)
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியிருந்த நிலையில் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பு மற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அரியலூரில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுசூழல் அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டு தமிழக சுற்றுசூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹைட்ரோகார்பன் எடுக்க மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments